பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!
Mar 15, 2026, 10:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பானி பூரி பிடிக்காதவர்கள் சாப்பிடாதவர்கள் இந்தியாவில் உண்டா என்ன? வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவாக இருந்தாலும் , இந்தியா முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிறியவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பானி பூரி ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

உருளைக் கிழங்கு, புளி, வெங்காயம், கொண்டை கடலை மற்றும் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் பானி பூரி உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கேள்வி எப்போதுமே எழுவதுண்டு. பானி பூரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது.

கர்நாடகாவில் தெருவோரங்களில் விற்கப்படும் பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளின் தரம் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 260 பானி பூரி மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் பல அதிர்ச்சியான முடிவுகள் வெளிவந்துள்ளன.

சோதனை செய்யப்பட்ட பானி பூரிகளில் 22 சதவீதம் உண்பதற்கான தரத்தை மீறியுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

260 பானி பூரிகளில் 41 மாதிரி பானி பூரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்று நோயை உருவாக்கும் வேதிப் பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் 18 மாதிரி பானி பூரிகள் மனிதர்கள் உண்பதற்குத் தகுதியற்றவை என்றும், அவற்றில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பானி பூரி வியாபாரிகள், தரமற்ற மற்றும் புற்று நோய் உருவாக்கும் செயற்கை நிறங்களைச் சேர்ப்பது கண்டறிய பட்டால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரித்து இருக்கிறார்.

பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் பாதுகாப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, ஷவர்மா மாதிரிகளில் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப் பட்ட 17 ஷவர்மா மாதிரிகளில் 8 மாதிரிகள் தரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, கர்நாடக அரசு கோபி மஞ்சூரியான், மற்றும் பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரோடமின் பி என்னும் வேதிப்பொருளுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Tags: If you eat pani puricancer is guaranteed? Shocking information!
ShareTweetSendShare
Previous Post

மாநகர குளிர்சாதன பேருந்தில் தீவிபத்து!

Next Post

ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies