பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!
Jul 27, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Jul 3, 2024, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பானி பூரி பிடிக்காதவர்கள் சாப்பிடாதவர்கள் இந்தியாவில் உண்டா என்ன? வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவாக இருந்தாலும் , இந்தியா முழுவதும் பானி பூரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிறியவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பானி பூரி ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

உருளைக் கிழங்கு, புளி, வெங்காயம், கொண்டை கடலை மற்றும் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் பானி பூரி உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கேள்வி எப்போதுமே எழுவதுண்டு. பானி பூரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது.

கர்நாடகாவில் தெருவோரங்களில் விற்கப்படும் பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, சாலை ஓரங்களில் விற்கப்படும் பானி பூரிகளின் தரம் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 260 பானி பூரி மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் பல அதிர்ச்சியான முடிவுகள் வெளிவந்துள்ளன.

சோதனை செய்யப்பட்ட பானி பூரிகளில் 22 சதவீதம் உண்பதற்கான தரத்தை மீறியுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

260 பானி பூரிகளில் 41 மாதிரி பானி பூரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்று நோயை உருவாக்கும் வேதிப் பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் 18 மாதிரி பானி பூரிகள் மனிதர்கள் உண்பதற்குத் தகுதியற்றவை என்றும், அவற்றில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பானி பூரி வியாபாரிகள், தரமற்ற மற்றும் புற்று நோய் உருவாக்கும் செயற்கை நிறங்களைச் சேர்ப்பது கண்டறிய பட்டால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரித்து இருக்கிறார்.

பானி பூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் பாதுகாப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, ஷவர்மா மாதிரிகளில் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப் பட்ட 17 ஷவர்மா மாதிரிகளில் 8 மாதிரிகள் தரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, கர்நாடக அரசு கோபி மஞ்சூரியான், மற்றும் பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரோடமின் பி என்னும் வேதிப்பொருளுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Tags: If you eat pani puricancer is guaranteed? Shocking information!
ShareTweetSendShare
Previous Post

மாநகர குளிர்சாதன பேருந்தில் தீவிபத்து!

Next Post

ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!

Related News

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies