திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் விவசாயிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் விவசாய ஆழ்துளை கிணற்றில் ஒரு இலவச மின் இணைப்பு பெற்று, 2 மோட்டார்கள் இயக்கி வந்துள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திருமாறன் இளையநம்பி என்பவர் விவசாயி தங்கராசுவிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் உதவி செயற்பொறியாளரை கைது செய்தனர்.