அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு பாடப்பிரிவில் சேர்ந்தவர்கள் வேறொரு பிரிவுக்கு மாற விரும்பினால் அவர்களும் TNGASA என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 8-ம் தேதி மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.