மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது! - பிரதமர் மோடி
Mar 17, 2026, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 20 ஆண்டுகளும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், உத்திரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சியை 3-வது முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கட்சியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்த எதிர்க்கட்சிகள் கடைசியில் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போரில் நாடு வெற்றி பெறுவதோடு, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், அரசியல் சாசனம் என்பது வெறும் எழுத்தல்ல எனவும் உணர்வு என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் சாசனம் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது இடையூறு செய்ததைப்போன்றே இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி இடையூறு செய்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, பொய்களை மட்டுமே பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும், பாரம்பரியமிக்க மேலவையை எதிர்க்கட்சிகள்
அவமதிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: The situation has improved in various parts of Manipur! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

நீட் விலக்கு மசோதாவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது!- கரு நாகராஜன் பேட்டி

Next Post

ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு! – தங்கம், வெள்ளி நகைகள் மாயம்!

Related News

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies