மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது! - பிரதமர் மோடி
Sep 19, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 02:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 20 ஆண்டுகளும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், உத்திரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சியை 3-வது முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கட்சியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்த எதிர்க்கட்சிகள் கடைசியில் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போரில் நாடு வெற்றி பெறுவதோடு, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், அரசியல் சாசனம் என்பது வெறும் எழுத்தல்ல எனவும் உணர்வு என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் சாசனம் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது இடையூறு செய்ததைப்போன்றே இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி இடையூறு செய்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, பொய்களை மட்டுமே பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும், பாரம்பரியமிக்க மேலவையை எதிர்க்கட்சிகள்
அவமதிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: The situation has improved in various parts of Manipur! - Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

நீட் விலக்கு மசோதாவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது!- கரு நாகராஜன் பேட்டி

Next Post

ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு! – தங்கம், வெள்ளி நகைகள் மாயம்!

Related News

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies