தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு!- அண்ணாமலை
Sep 30, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு!- அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 3, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு மாநில மக்களையும் கம்யூனிஸ்ட் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

தமிழகக் கலாச்சாரத்தின் பெருமையான செங்கோலையும், பண்டைய தமிழக மன்னர்களையும், நமது மூதாதையரான பண்டைய தமிழக மகளிரையும் அவமானப்படுத்திவிட்டு, பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்ததும் செங்கோலுக்குப் புதியதோர் விளக்கம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் சு. வெங்கடேசன் அவர்கள்.

நீதி மற்றும் அறத்தின் குறியீடு செங்கோல் என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள், ஜனநாயகத்தில் நீதி மற்றும் அறத்துக்கு இடமில்லை என்று சொல்ல முயற்சிப்பதைப் போலத் தெரிகிறது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக் கட்சிகளிடம் இல்லாத நீதி மற்றும் அறம், ஜனநாயகத்தில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே, பாராளுமன்ற அவையின் மையத்தில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை, உங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தங்களின் நாவல்களில், காலம்தான் கதாநாயகன் என்று கூறியிருக்கிறீர்கள். நன்று. காலநதி, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கூழாங்கல்லைப் போல உருட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் எது என்பதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

ஒரு தொகுதிக்கும் இரண்டு தொகுதிக்கும், திமுகவிடம் ஒட்டு மொத்த கட்சியையுமே அடகு வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு, இவற்றை எல்லாம் பேசத் தகுதி உள்ளதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? காலாவதியான ஒரு சித்தாந்தத்தை, தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு.

தமிழக எல்லை வரை காங்கிரஸுடன் கூட்டணி, கேரளாவிற்குச் சென்றால், காங்கிரஸ் எதிர்ப்பு என்று, ஒவ்வொரு மாநில மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கொண்டு, அரசியல் சாசனம் குறித்தும், நேர்மையைக் குறித்து நீங்கள் பேசுவது நகைப்பிற்குரியது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒட்டு மொத்த இந்தி கூட்டணிக் கட்சிகளும் வென்ற தொகுதிகளையும் சேர்த்தாலும், பாஜக தனியாக வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைப் பெற முடியவில்லை என்ற உண்மை எப்போது உங்களுக்கு உரைக்கும்? இறுதியாக, மதுரை மேயருக்கு நீங்கள் கொடுத்த செங்கோலுக்கும், பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர் மரபு செங்கோலுக்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் கூறுவது, ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்துகிறது.

மனம் விட்டுச் சிரித்தேன். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உங்களிடம் இன்னும் சிறப்பான பதிலை எதிர்பார்த்திருந்தேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Today's communists are society's favorite evil!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு செல்கிறார் நடிகர் அஜித்!

Next Post

திமுக கிளை செயலாளர் வீட்டில் பதுக்கப்பட்ட வேட்டி, சேலைகள் பறிமுதல்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies