யார் இந்த போலே பாபா?
Sep 7, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யார் இந்த போலே பாபா?

Web Desk by Web Desk
Jul 3, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேசத்தில் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் மற்றும் குழந்தைகளும் எனத் தெரியவந்துள்ளது. யார் இந்த போலே பாபா ? அவரதுஆன்மீக சொற்பொழிவுக்கு ஏன் இத்தனை கூட்டம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த செவ்வாய்கிழமை உத்தரபிரதேசத்தில், ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் பலியான மோசமான சம்பவத்துக்குக் காரணம் போலே பாபா தான் என்று முன்னாள் காவல்துறை டிஜிபி விக்ரம் சிங் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்த நிலையில், தற்போது, தலைமறைவாகி இருக்கும் போலே பாபா மீது, பாரதிய நியாய சன்ஹிதா 105, 110, 126 (2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

58 வயதாகும் போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் விஸ்வ ஹரி, உத்தர பிரதேசத்தில், காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பகதூர் நகர் கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சூரஜ் பால் சிங் ஆகும். குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த இவரின் அண்ணன் அண்மையில் இறந்த நிலையில், தம்பி ராகேஷ், சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

போலே பாபா, ஆரம்பத்தில் உத்தர பிரதேச காவல் துறையில் காவலராக பணிபுரிந்தார் என்றும், உளவுத்துறையிலும் இருந்துள்ளார் என்றும், காவல் துறை வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற போது, கடைசியாக ஆக்ராவில் பணியிலிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

காவல்துறையை விட்டு வெளியேறிய பிறகு, தன்னுடைய பெயரை போலே பாபா என்று மாற்றிக்கொண்ட இவருக்குத் திருமணமான போதிலும் குழந்தைகள் இல்லை. எனவே தனது மனைவியுடன் சேர்ந்து ஆன்மீக அவதாரம் எடுத்தார். இவரது மனைவி மாதா ஸ்ரீ என்றே அழைக்கப் படுகிறார்.

எந்த குரு நாதரும் தமக்கு இல்லை . தாமே சர்வ வல்லமையுள்ள குரு என்று சுயபிரகடனம் செய்து கொண்ட போலே பாபா நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகள் ‘மானவ் மங்கள் மிலன் சத்பவன சமகம்’ என்று அழைக்கப்படுகிறது.

இவரின் ஆன்மீக நிகழ்ச்சிகள், பெரும்பாலும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்படுகின்றன. இந்த ஆன்மீக நிகழ்ச்சிகளை போலே பாபா தன் மனைவியுடன் இணைந்தே நடத்தி வருகிறார்.

ஆங்கிலேயர் ஆடை பாணியில் வெள்ளை நிற சூட், டை மற்றும் ஷூ அணிந்து ஆன்மீக சொற்பொழிவாற்றும் போலே பாபா , சில சமயங்களில் குர்தா-பைஜாமாவிலும் நிகழ்ச்சி நடத்துவதுண்டு.

ஆரம்பத்தில், பொருளாதாரத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களும், உத்தர பிரதேசத்தின் பிரஜ் மண்டலத்தின் ஆக்ரா மற்றும் அலிகார் பகுதியில் உள்ளவர்களும், நாராயண் சாகர் விஸ்வ ஹரி பாபா என்றும் அழைக்கப்படும் போலே பாபாவின் பிரதான பக்தர்களாக இருந்தார்கள்.

இப்போது, உத்தரபிரதேசத்தைத் தாண்டியும் உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி என தன் ஆன்மீக செல்வாக்கை வளர்த்திருக்கிறார் போலே பாபா. குறிப்பாக, தொழிலதிபர்களுடனும் அரசியல்வாதிகளுடன் போலே பாபா மிகவும் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டிருக்கிறார். ஹிந்துக்கள், சீக்கியர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்களும் இவரது பக்தர்களாக உள்

வட இந்தியா முழுவதும் தனக்கான ஆன்மீக ஆதரவாளர்களை கொண்டிருக்கும் போலே பாபா, சொந்த ஊரில் ஒரு ஆசிரமம் கட்டியிருக்கிறார்.

பல நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களை போலே பாபாவின் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாக பதிவு செய்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும்,உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் கடந்த ஆண்டு, போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தனது எக்ஸ் தளத்தில், பாபாவின் புகைப் படங்களைப் பகிர்ந்து, ‘பிரபஞ்சம் முழுவதும் நாராயண் சகர் ஹரிக்கு நித்திய மகிமை உண்டாகட்டும்.’ என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எந்த சமூக ஊடகங்களிலும் தனக்கென ஒரு கணக்கை வைத்துக் கொள்ளாத பாபா போலே மீது, பாலியல் குற்றச் சாட்டுகள் உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் திவேதி பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

Tags: Who is this baba?
ShareTweetSendShare
Previous Post

அஸ்ஸாமில் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்!

Next Post

சோதனை TO சாதனை ‘QUEEN OF POP’ மடோனா!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies