தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!
Sep 2, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 18, 2026, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தை அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி இன்று தை அமாவாசை தினம் என்பதால், பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

பின்னர் பக்தர்கள், ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் கோயில், கடற்கரை பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சதுரகிரியில் உள்ள சுந்த மகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விருதுநகரில் உள்ள இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் தை மாத அமாவாசையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் சென்ற பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என வனத்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வேகமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை பகுதியில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

சங்கமேஸ்வரர் கோயிலின் பரிகார மண்டபங்கள் மட்டுமன்றி, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பரிகார கூடங்களிலும் தங்களது மூதாதையருக்கு திதி, பித்ரு பூஜை, தர்ப்பணம் வழங்கி பொதுமக்கள் வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை குவிந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் தை அமாவாசையை ஒட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் பக்தர்கள் தங்களது மறைந்த முன்னோர்கள நினைவாக வாழை இலையில்,பச்சரிசி , தேங்காய், காய்கறி உள்ளிட்டவை வைத்து வழிபட்டனர்.

தை அமாவாசை தினமான இன்று குற்றால அருவி கரையில் புனித நீராடி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசை முன்னிட்டு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பாபநாசம் ஆற்றின் கரையோரங்களில் தர்பணம் செய்து புனித நீராடி வாரிசுகள் வழிபட்டனர்.

Tags: devotees took holy tiprameswaramAgni TheerthamThai Amavasya
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலம்!

Next Post

பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

Related News

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies