அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான ‘கம் பேக்’ கொடுக்கும் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ருதுராஜ் கெய்க்வாட், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும், அந்த அழுத்தத்தை ரசித்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் தொடர்வதாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ரசிகர்கள் தொடர்ந்து அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
















