நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை அமைச்சர் சரத்குமார் வரவேற்றார்.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த புனித யாத்திரை பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணியில், 2-வது கட்டமாக சென்னையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மதுரையைச் சேர்ந்த 3 பேர் என 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை அமைச்சர் சரத்குமார் மற்றும் அயலக தமிழர் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். முன்னதாக, முதற்கட்டமாக 21 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
















