சென்னையில் மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால், இனி மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அதிக மின் கட்டணம் வந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், ஆய்வில் 9 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளில் கட்டணம் அதிகரித்ததும், 2 ஆயிரம் வீடுகளில் மின் பயன்பாடு தவறாக கணக்கிடப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அனைத்து மின் இணைப்புகளிலும் நேரில் மீட்டரை பார்த்து கணக்கெடுக்கவும், 100 சதவீதம் தானியங்கி முறையில் கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
















