திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதத்தின் வீடு மற்றும் முகாம் அலுவலகத்தில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருமலை கோயில் துணை நிர்வாக அதிகாரியாக லோகநாதம் பொறுப்பு வகித்து வருகிறார். திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், திருமலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திலும் இரண்டு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனை, தேவஸ்தான வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















