அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. அசாமில் 56 பேர் உயிரிழந்த நிலையில் 21 லட்சத்துக்கும் மேலான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். இதேபோல மணிப்பூரில் 2 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் வெள்ளப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.