டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த வரும் சிபிஐ, கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இந்நிலையில், சிபிஐ வழக்கில் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.