நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்களின் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2023-24 நிதியாண்டில் உள்நாட்டில் மேற்கொண்ட ஆயுத தளவாட பொருட்கள் உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட பிற நிறுவனங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி, பாதுகாப்புத் துறை சார்ந்த பொருட்களின் உற்பத்தி மதிப்பு, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 16.7 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 26 ஆயிரத்து 887 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதிலும், கடந்த 2022-23 நிதியாண்டில் பாதுகாப்புத் துறை சார்ந்த தளவாடப் பொருட்களின் உற்பத்தியானது, 1 கோடியே 8 ஆயிரத்து 684 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.