மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய திட்டத்தில் கர்நாடக அரசு 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் செய்தியாளரிடம் பேசிய அவர், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்த நிலம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், இதில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.
அப்போதைய மைசூரு மாவட்ட துணை ஆட்சியர் இந்த முறைகேடு தொடர்பாக மாநில அரசுக்கு 15-க்கும் அதிகமான முறை கடிதம் எழுதியதாக கூறிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இந்த ஊழலை மூடி மறைக்க அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.