தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்
Jan 15, 2026, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள் நலனுக்காக, சொந்த நிலங்களில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, வருடம் ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் விவசாயிகள் கௌரவ நிதி (PM Kisan) திட்டத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும், 17 தவணைகளாக, ரூ.34,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, தமிழக விவசாயிகளுக்கு ரூ. 10,435 கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 2015 – 16 ஆம் ஆண்டு விவசாயக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளதாகவும், இவர்களில், சுமார் 39 லட்சம் விவசாயிகள், இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறத் தகுதியுடையவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் உண்மையான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்காமல், சுமார் 7 லட்சம் போலியான நபர்களை இந்தத் திட்டத்தில் இணைத்து, பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் கண்டறியப்பட்டு, அவர்களின் பெயர்கள் இந்தத் திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. ஆனால், தகுதியுடைய உண்மையான விவசாயிகளை இணைக்கும் பணி நடைபெறவில்லை.

கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் சுமார் 44 லட்சம் பேர் பலனடைந்த இந்தத் திட்டத்தில், பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள். சுமார் 23 லட்சம் பயனாளிகள், திமுக அரசால் விவசாயிகள் உதவித் தொகை பெறுவதிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

23 லட்சம் பேரும் விவசாயிகள் இல்லையென்றால், இந்த மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை என்ன? சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

இதில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க, 2015 – 16 ஆம் ஆண்டு விவசாயிகள் கணக்கெடுப்பின்படி, சுமார் 39 லட்சம் விவசாயிகள், மத்திய அரசின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயனடையத் தகுதியுடையவர்கள்.

ஆனால், வெறும் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது பயனடைகிறார்கள் என்றால், தமிழகத்தில் இருந்து, தகுதியான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்க, திமுக அரசு மெத்தனமாக இருக்கிறது என்றுதான் பொருள். விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்திற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில், உரிய விபரங்களை தமிழக வேளாண்துறையினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழக வேளாண்துறையினர் மெத்தனமாக உள்ளதால், பல லட்சம் தகுதியுள்ள விவசாயிகள், மத்திய அரசின் விவசாய உதவித் தொகையைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட 23 லட்சம் பேரும் உண்மையில் விவசாயிகள் இல்லையா அல்லது மத்திய அரசுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக, திமுக அரசு செய்யும் கீழ்த்தரமான வேலையா என்ற கேள்வி எழுகிறது.

மேலும், இந்த நிதி, விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால், திமுக தனது ஸ்டிக்கர் ஒட்ட வழியில்லாமல், தகுதியுள்ள விவசாயிகளை, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து இணைக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

உடனடியாக, தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, மத்திய அரசு விவசாய கௌரவ நிதி பெறத் தகுதியான அனைத்து விவசாயிகளையும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், திமுக அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக பாஜக  சார்பாக அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Tamil Nadu Agriculture Department should give up its lax attitude!- Annamalai insists
ShareTweetSendShare
Previous Post

பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை – ஜெ.பி.நட்டா கண்டனம்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies