நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!
Aug 3, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் ஜவுளித்துறை, கடந்த சில ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் வருடாந்திர தொழில்துறை ஆய்வறிக்கையின் படி, 2021-22 முதல் 2023-24 வரையிலான குறுகிய காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் 2 ஆயிரத்து 121 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்து 672 ஆக குறைந்துள்ளது. அதேபோல, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி சார்ந்த 11 ஆயிரத்து 460 நிறுவனங்களில், 8 ஆயிரத்து 503 நிறுவனங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. அத்துடன் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் விசைத்தறி ஆலைகள் முடங்கியிருப்பது, ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் தீவிர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீழ்ச்சிக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 9 ரூபாய் 25 காசுகளாக இருப்பதால், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக, தமிழக ஜவுளித் துறையின் போட்டித்திறன் குறைந்து வருவதாக சுட்டிக்காட்டும் அவர்கள், இதனால் பல சிறு மற்றும் குறு மில் உரிமையாளர்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், என்.டி.சி மில்கள் இயங்கிய காலத்தில் பஞ்சு விலை கட்டுக்குள் இருந்ததாக கூறும் தொழில் துறையினர், தற்போது சில சிண்டிகேட் அமைப்புகள் விலையை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் தொழிலாளர் பற்றாக்குறை, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு, ‘பூஜ்ஜிய திரவக் கழிவு’ விதிமுறைகளால் ஏற்படும் கூடுதல் சுத்திகரிப்பு செலவுகள் ஆகியவை ஜவுளித் தொழிலின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. இதன் காரணமாக ஜவுளித்துறை மட்டுமின்றி அதனை சார்ந்துள்ள விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டு வரும் ஜவுளி துறையை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, மின் கட்டணத்தில் சலுகை வழங்குதல், மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துதல் மற்றும் தொழிலுக்கு ஆதரவான ஊக்கத் திட்டங்களை அறிவித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Tags: Ministry of Textileselectricity tariffs increasetextile industrydmk govenmenteconomic backbonetextile sectorTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

Next Post

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies