தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு - சிறப்பு தொகுப்பு!
Sep 17, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 06:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2019-ல் 6 ஆயிரத்து 984 வழக்குகளும், 2020-ல் 6 ஆயிரத்து 630 வழக்குகளும், 2021-ல் 8 ஆயிரத்து 501 வழக்குகளும், 2022-ல் 9 ஆயிரத்து 207 வழக்குகளும், 2023-ல் 8 ஆயிரத்து 943 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்தமாக இந்த காலகட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசு கொண்டு வந்த நிர்பயா நிதியின் பயன்பாடு குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா நிதியை அறிமுகப்படுத்தியது. இந்த நிதி மூலம் பாதுகாப்பான பொது இடங்கள் அமைத்தல், சிசிடிவி கண்காணிப்பு, அவசர உதவி மையங்கள், One Stop Centre, Women Helpline 181, Safe City போன்ற திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு நிர்பயா நிதியாக மொத்தம் 425.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 353.69 கோடி ரூபாய் வரை விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசால் 45.86 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் குறைந்த அளவு செலவினமே பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமடைய முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் சென்னை காவல்துறை மூலம் இந்த நிதியில் இருந்து, பெண்கள் பாதுகாப்புக்கான ரோந்து, கட்டுப்பாட்டு மையங்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் Women Helpline சேவைகள் போன்ற சில திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பெண்கள் பாதுகாப்பைத் தாண்டி அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அரசால் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும்முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது, அரசின் செயல்திறன் குறித்த கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுப்பியுள்ளது.

Tags: crimes against women'Nirbhaya Fund'Tamil Naducentral governmentDMK government
Share
Tweet
SendShare
Previous Post

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies