தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு - சிறப்பு தொகுப்பு!
Jun 18, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2019-ல் 6 ஆயிரத்து 984 வழக்குகளும், 2020-ல் 6 ஆயிரத்து 630 வழக்குகளும், 2021-ல் 8 ஆயிரத்து 501 வழக்குகளும், 2022-ல் 9 ஆயிரத்து 207 வழக்குகளும், 2023-ல் 8 ஆயிரத்து 943 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்தமாக இந்த காலகட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசு கொண்டு வந்த நிர்பயா நிதியின் பயன்பாடு குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா நிதியை அறிமுகப்படுத்தியது. இந்த நிதி மூலம் பாதுகாப்பான பொது இடங்கள் அமைத்தல், சிசிடிவி கண்காணிப்பு, அவசர உதவி மையங்கள், One Stop Centre, Women Helpline 181, Safe City போன்ற திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு நிர்பயா நிதியாக மொத்தம் 425.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 353.69 கோடி ரூபாய் வரை விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசால் 45.86 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் குறைந்த அளவு செலவினமே பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமடைய முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் சென்னை காவல்துறை மூலம் இந்த நிதியில் இருந்து, பெண்கள் பாதுகாப்புக்கான ரோந்து, கட்டுப்பாட்டு மையங்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் Women Helpline சேவைகள் போன்ற சில திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பெண்கள் பாதுகாப்பைத் தாண்டி அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அரசால் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும்முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது, அரசின் செயல்திறன் குறித்த கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுப்பியுள்ளது.

Tags: crimes against women'Nirbhaya Fund'Tamil Naducentral governmentDMK government
ShareTweetSendShare
Previous Post

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்பு தொகுப்பு!

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வங்கதேசத்தில் ஸ்ரீராமர் அவமதிக்கப்பட்ட விவகாரம் – தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்!

101 நாட்களுக்கு பின்னர் மானாமதுரை ஆகாஷ் உடல் தகனம் – நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விநியோகத்தில் முறைகேடு – அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வில் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் – 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் – பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 7 பயங்கரவாதிகள் கைது!

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக அவதூறு – திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies