பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரில் 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் 8 பேர் போலீஸில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சரியான ஆதாரங்கள் அடிப்படையில், உண்மையான குற்றவாளிகளை தான் கைது செய்திருப்பதாக வடசென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரில் 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 8 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.