விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடங்கிய இந்த அகழாய்வுப் பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை பொம்மை, காதணி ஆகிய தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இப்பகுதியில் தொடர்ந்து காளை பொம்மைகள் கண்டெடுக்கப்படுவதால் இங்கு வாழ்ந்த மனிதர்கள் ஜல்லிக்கட்டுக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளனர் என தொல்லியல் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.