பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!
Aug 24, 2025, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!

Web Desk by Web Desk
Jul 9, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிழக்கு லடாக்கில், பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சீனாவின் சிர்ஜாப் ராணுவத் தளத்தில் நிலத்தடி பதுங்கு குழிகள் அமைக்கப் பட்டுள்ளன. அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த சீன ராணுவத் தளத்தின் செயற்கை கோள் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

லே லடாக்கின் மிகவும் பிரசித்தி பெற்ற ஏரிகளில் ஒன்றான பாங்காங் ஏரி, கிட்டத்தட்ட 4,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிக உயரமான உப்பு நீர் ஏரியாகும். சுற்றிலும் வறண்ட மலைகளுக்கு,மத்தியில் இந்த ஏரி அமைந்திருக்கிறது.

“உயர்ந்த புல்வெளி ஏரி” என்று அழைக்கப் படும் பாங்காங் ஏரி வெவ்வேறு நேரங்களில் நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் தன் வண்ணங்களை மாற்றும் அழகுடையது. ஏறக்குறைய 160 கிமீ நீளம் கொண்ட பாங்காங் ஏரியின் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கும், மூன்றில் இரண்டு பங்கு சீனாவுக்கும் உரிமை உடையதாக இருக்கிறது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய போர் பதற்றம் தற்போது வரை தொடர்கிறது. பாங்காங் ஏரியின் ஒருபுறம் இந்திய ராணுவமும், மறுபுறம் சீன இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையே, ராணுவத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை பலசுற்றுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், இந்திய எல்லைப் பகுதியில், சீனா தனது அடாவடி செயல்பாடுகளை நிறுத்தியதாக தெரியவில்லை.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியை சுற்றியுள்ள பகுதியில், சீன இராணுவ தளம் அமைக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலத்தடி பதுங்கு குழிகளும் கட்டப்பட்டுள்ளன. ஆயுதங்கள், எரிபொருட்கள் மற்றும் கவச வாகனங்களுக்கான சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பாங்காங் ஏரியைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்களின் வீரர்களின் தலைமையகமாக இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் செயல்படுகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் அமைந்திருக்கிறது. இந்தியா உரிமை கொண்டாடும் இடத்தில் சீனா இந்த ராணுவ தளத்தை கட்டி இருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

2020 மற்றும் 20201 ஆம் ஆண்டுகளில் சீனா இந்த இராணுவத் தளத்தைக் கட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய எல்லையில் தன்னை பலப்படுத்திக்கொள்ள சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Line of Actual Control-ல் மறுபுறம், சாலைகளையும் பாலங்களையும் சீனா கட்டி வருகிறது.

கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட, செயற்கை கோள் புகைப்படங்களில், சிர்ஜாப் இராணுவத் தளத்தின் பல்வேறு அம்சங்கள் தெளிவாக தெரிகின்றன.

சிர்ஜாப் இராணுவத் தளத்தில், ஒரு பெரிய நிலத்தடி பதுங்கு குழியின் எட்டு சாய்வான நுழைவு வாயில்கள் உள்ளன. இதேபோல், பெரிய பதுங்கு குழிக்கு அருகில் மற்றொரு சிறிய பதுங்கு குழியும் உள்ளது. சிறிய பதுங்கு குழிக்கு ஐந்து நுழைவு வாயில்கள் இருக்கின்றன.

சிர்ஜாப் இராணுவத் தலைமையகத்துக்கான பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்கள், மூடப்பட்ட இராணுவ கவச வாகனங்கள் நிறுத்துமிடங்களும் அமைக்கப் பட்டுள்ளன. விமானத் தாக்குதல்களிலிருந்து இராணுவ வாகனங்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த தங்குமிடங்கள் அமைக்கப் பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

லடாக் எல்லை பகுதியில் செயற்கை கோள்களால் படம் பிடிக்க முடியாத சாலைகளை சீனா கட்டியுள்ளது. இந்த சாலைகளுடன் சிர்ஜாப் இராணுவத் தலைமையகம் இன்டர்நெட் தொழிநுட்பத்தால் இணைக்கப் பட்டுள்ளது. இதனால், அவசியம் ஏற்படும் போது, பீரங்கிகளையும், இராணுவ கவச வாகனங்களையும் எளிதில் எல்லை பகுதிக்கு கொண்டு வரமுடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

2020ம் ஆண்டு ஏற்பட்ட சீனா எல்லை மோதலுக்குப் பின், இந்தியா தனது எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இராணுவத் தளவாடங்களை எல்லைக் கோட்டுக்கருகே கொண்டு செல்வதற்கான சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள், விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகளை இந்தியா அதிகளவில் உருவாக்கி இருக்கிறது.

திபெத், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா தனது ராணுவ செயல்பாடுகளால், கடும் போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது என்று நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: China has set up a secret military base with bunkers in Ladakh!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை 3-ஆவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு!- பிரதமர் மோடி

Next Post

பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies