பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிழக்கு லடாக்கில், பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சீனாவின் சிர்ஜாப் ராணுவத் தளத்தில் நிலத்தடி பதுங்கு குழிகள் அமைக்கப் பட்டுள்ளன. அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த சீன ராணுவத் தளத்தின் செயற்கை கோள் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

லே லடாக்கின் மிகவும் பிரசித்தி பெற்ற ஏரிகளில் ஒன்றான பாங்காங் ஏரி, கிட்டத்தட்ட 4,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிக உயரமான உப்பு நீர் ஏரியாகும். சுற்றிலும் வறண்ட மலைகளுக்கு,மத்தியில் இந்த ஏரி அமைந்திருக்கிறது.

“உயர்ந்த புல்வெளி ஏரி” என்று அழைக்கப் படும் பாங்காங் ஏரி வெவ்வேறு நேரங்களில் நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் தன் வண்ணங்களை மாற்றும் அழகுடையது. ஏறக்குறைய 160 கிமீ நீளம் கொண்ட பாங்காங் ஏரியின் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கும், மூன்றில் இரண்டு பங்கு சீனாவுக்கும் உரிமை உடையதாக இருக்கிறது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய போர் பதற்றம் தற்போது வரை தொடர்கிறது. பாங்காங் ஏரியின் ஒருபுறம் இந்திய ராணுவமும், மறுபுறம் சீன இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையே, ராணுவத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை பலசுற்றுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், இந்திய எல்லைப் பகுதியில், சீனா தனது அடாவடி செயல்பாடுகளை நிறுத்தியதாக தெரியவில்லை.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியை சுற்றியுள்ள பகுதியில், சீன இராணுவ தளம் அமைக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலத்தடி பதுங்கு குழிகளும் கட்டப்பட்டுள்ளன. ஆயுதங்கள், எரிபொருட்கள் மற்றும் கவச வாகனங்களுக்கான சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பாங்காங் ஏரியைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்களின் வீரர்களின் தலைமையகமாக இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் செயல்படுகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் இந்த சிர்ஜாப் இராணுவத் தளம் அமைந்திருக்கிறது. இந்தியா உரிமை கொண்டாடும் இடத்தில் சீனா இந்த ராணுவ தளத்தை கட்டி இருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

2020 மற்றும் 20201 ஆம் ஆண்டுகளில் சீனா இந்த இராணுவத் தளத்தைக் கட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய எல்லையில் தன்னை பலப்படுத்திக்கொள்ள சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Line of Actual Control-ல் மறுபுறம், சாலைகளையும் பாலங்களையும் சீனா கட்டி வருகிறது.

கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட, செயற்கை கோள் புகைப்படங்களில், சிர்ஜாப் இராணுவத் தளத்தின் பல்வேறு அம்சங்கள் தெளிவாக தெரிகின்றன.

சிர்ஜாப் இராணுவத் தளத்தில், ஒரு பெரிய நிலத்தடி பதுங்கு குழியின் எட்டு சாய்வான நுழைவு வாயில்கள் உள்ளன. இதேபோல், பெரிய பதுங்கு குழிக்கு அருகில் மற்றொரு சிறிய பதுங்கு குழியும் உள்ளது. சிறிய பதுங்கு குழிக்கு ஐந்து நுழைவு வாயில்கள் இருக்கின்றன.

சிர்ஜாப் இராணுவத் தலைமையகத்துக்கான பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்கள், மூடப்பட்ட இராணுவ கவச வாகனங்கள் நிறுத்துமிடங்களும் அமைக்கப் பட்டுள்ளன. விமானத் தாக்குதல்களிலிருந்து இராணுவ வாகனங்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த தங்குமிடங்கள் அமைக்கப் பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

லடாக் எல்லை பகுதியில் செயற்கை கோள்களால் படம் பிடிக்க முடியாத சாலைகளை சீனா கட்டியுள்ளது. இந்த சாலைகளுடன் சிர்ஜாப் இராணுவத் தலைமையகம் இன்டர்நெட் தொழிநுட்பத்தால் இணைக்கப் பட்டுள்ளது. இதனால், அவசியம் ஏற்படும் போது, பீரங்கிகளையும், இராணுவ கவச வாகனங்களையும் எளிதில் எல்லை பகுதிக்கு கொண்டு வரமுடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

2020ம் ஆண்டு ஏற்பட்ட சீனா எல்லை மோதலுக்குப் பின், இந்தியா தனது எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இராணுவத் தளவாடங்களை எல்லைக் கோட்டுக்கருகே கொண்டு செல்வதற்கான சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள், விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகளை இந்தியா அதிகளவில் உருவாக்கி இருக்கிறது.

திபெத், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா தனது ராணுவ செயல்பாடுகளால், கடும் போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது என்று நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: China has set up a secret military base with bunkers in Ladakh!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை 3-ஆவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு!- பிரதமர் மோடி

Next Post

பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies