உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் லக்னோ- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பால் லாரியும், இரண்டு அடுக்கு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் மோதிஹரியில் இருந்து டெல்லி நோக்கி இரண்டு அடுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
லக்னோ- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து, அந்த வழியாக சென்ற பால் லாரியின் பின்புறம் மோதியது.
இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 18 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கபிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.