விவாகரத்தான இஸ்லாமிய பெண்களுக்கும் தங்களது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இதைத்தொடர்ந்து, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரி, அவரது மனைவி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை நிறைவில் முகமது அப்துல் சமத் தனது மனைவிக்கு மாதம் தலா 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து முகமது அப்துல் சமத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பாரதி நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 125-இன்கீழ் விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் தங்களது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற தகுதியுடையவர்கள் என்று கூறி, தெலங்கானா உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.