ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் கால் நெஹம்மரை சந்தித்து பேசினார்.
வியன்னாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அப்போது வியன்னா அதிபர் கால் நெஹம்மரும் உடனிருந்தார். ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதிபர் மாளிகை விருந்தினர் குறிப்பேட்டில் தனது நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய அதிபர் கால் நெஹம்மர் இருவரும் இருநாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, வியன்னா அதிபர் மாளிகையில் இருதரப்பு பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியா- ஆஸ்திரியா இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.