828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் திரிபுராவில் அதிர்ச்சி!
Mar 16, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் திரிபுராவில் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது.

இந்தியாவில் HIV பாதிப்பு கண்டறியப்பட்ட 1986-ஆம் ஆண்டு முதல் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று திரிபுராவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 47 மாணவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது பெரும் துயரம்.

TRIPURA STATE AIDS CONTROL SOCIETY சமர்ப்பித்திருக்கும் அறிக்கையின்படி, மே 2024 வரை திரிபுரா மாநிலத்தில் 8,729 பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 674 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். அவர்களில் 4 ஆயிரத்து 570 பேர் ஆண்கள். ஆயிரத்து 103 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. பாதிக்கப்பட்டவர்களில் 828 பேர் மாணவர்கள் என்பதுதான் மிகுந்த மனவேதனையை தரும் செய்தி. 220 பள்ளிகள், 24 கல்லூரிகள் என மாநிலத்தில் இருக்கும் பல கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மாநிலத்திலிருக்கும் 164 சுகாதார மையங்களிலிருந்தும் இந்த தகவல்கள் சேகரிப்பட்டிருக்கின்றன.

மாணவர்களிடையே HIV பரவியதற்கு போதைப் பழக்கமே காரணம். ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியால் பெருந்தொற்று பரவியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணக்காரர்களும் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஏன் எதற்கு என்று கேட்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக அளவு பணத்தை கொடுத்ததே இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் வெளி மாநிலங்களுக்கு படிக்கச் சென்றுள்ளதாகவும் அவர்கள் திரிபுராவுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அண்மைக் காலமாகவே வடகிழக்கு மாநிலங்கள் பற்றி வெளியாகும் செய்திகள் நல்ல முறையில் இல்லை. மணிப்பூர் கலவரம், அசாம் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக வந்து சேர்ந்திருக்கிறது திரிபுரா துயரம்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திரிபுரா அரசு விளக்கமளித்துள்ளது. 828 மாணவர்கள் HIV-ஆல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களில் 47 பேர் உயிரிழந்திருப்பதும் உண்மைதான் என்று கூறியிருக்கும் திரிபுரா அரசு, இந்த தொற்றுகள் அனைத்தும் 2007 – 2024-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டவை என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2022- 23-ஆம் ஆண்டில் மட்டும் திரிபுராவில் மொத்தம் ஆயிரத்து 847 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் 2023-24-ஆம் ஆண்டில் ஆயிரத்து 790 பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 44 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.

Tags: AIDS shock for 828 students in Tripura!
ShareTweetSendShare
Previous Post

22 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட மலையேற்ற வீரரின் உடல்!

Next Post

ஆர்.எஸ்.பாரதி நிச்சயம் சிறை செல்வார்! – அண்ணாமலை

Related News

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies