828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் திரிபுராவில் அதிர்ச்சி!
Sep 16, 2025, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் திரிபுராவில் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது.

இந்தியாவில் HIV பாதிப்பு கண்டறியப்பட்ட 1986-ஆம் ஆண்டு முதல் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று திரிபுராவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 47 மாணவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது பெரும் துயரம்.

TRIPURA STATE AIDS CONTROL SOCIETY சமர்ப்பித்திருக்கும் அறிக்கையின்படி, மே 2024 வரை திரிபுரா மாநிலத்தில் 8,729 பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 674 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். அவர்களில் 4 ஆயிரத்து 570 பேர் ஆண்கள். ஆயிரத்து 103 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. பாதிக்கப்பட்டவர்களில் 828 பேர் மாணவர்கள் என்பதுதான் மிகுந்த மனவேதனையை தரும் செய்தி. 220 பள்ளிகள், 24 கல்லூரிகள் என மாநிலத்தில் இருக்கும் பல கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மாநிலத்திலிருக்கும் 164 சுகாதார மையங்களிலிருந்தும் இந்த தகவல்கள் சேகரிப்பட்டிருக்கின்றன.

மாணவர்களிடையே HIV பரவியதற்கு போதைப் பழக்கமே காரணம். ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியால் பெருந்தொற்று பரவியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணக்காரர்களும் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஏன் எதற்கு என்று கேட்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக அளவு பணத்தை கொடுத்ததே இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் வெளி மாநிலங்களுக்கு படிக்கச் சென்றுள்ளதாகவும் அவர்கள் திரிபுராவுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அண்மைக் காலமாகவே வடகிழக்கு மாநிலங்கள் பற்றி வெளியாகும் செய்திகள் நல்ல முறையில் இல்லை. மணிப்பூர் கலவரம், அசாம் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக வந்து சேர்ந்திருக்கிறது திரிபுரா துயரம்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திரிபுரா அரசு விளக்கமளித்துள்ளது. 828 மாணவர்கள் HIV-ஆல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களில் 47 பேர் உயிரிழந்திருப்பதும் உண்மைதான் என்று கூறியிருக்கும் திரிபுரா அரசு, இந்த தொற்றுகள் அனைத்தும் 2007 – 2024-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டவை என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2022- 23-ஆம் ஆண்டில் மட்டும் திரிபுராவில் மொத்தம் ஆயிரத்து 847 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் 2023-24-ஆம் ஆண்டில் ஆயிரத்து 790 பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 44 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.

Tags: AIDS shock for 828 students in Tripura!
ShareTweetSendShare
Previous Post

22 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட மலையேற்ற வீரரின் உடல்!

Next Post

ஆர்.எஸ்.பாரதி நிச்சயம் சிறை செல்வார்! – அண்ணாமலை

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies