பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்தனர்.
மின்டானோ தீவில் இன்று காலை ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 6.7 ஆக பதிவானது. எனினும் நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.