கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஏ.டி.எம். மையத்தின் அறை கதவை உடைத்து திருட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரகோவில் சந்திப்பு பகுதியில் உள்ள ATM மையத்திற்குள் நுழைந்த நபர், அங்குள்ள அறையின் பூட்டை உடைத்துள்ளார்.
அப்போது அலாரம் ஒலித்ததால், அந்த நபர் வெளியே வந்துள்ளார். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து கொண்டிருந்த வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், அங்கு மதுபோதையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் எட்டாமடையை சேர்ந்த தர்மர் என்பதும், ஏடிஎம் மையத்தில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து தர்மரை போலீசார் கைது செய்தனர்.