அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! - ஓ. பன்னீர்செல்வம்
Aug 22, 2025, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! – ஓ. பன்னீர்செல்வம்

Web Desk by Web Desk
Jul 11, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் எழும்பூரில் உள்ள அவரது திருவுருவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எம் ஜி ஆர், ஜெயலலிதா 50 ஆண்டு காலம் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை ஏன் டெபாசிட் இழந்தது? பல்வேறு இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடம் சென்றதற்கு என்ன காரணம்?

அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதை மாபெரும் இயக்கமாக யாராலும் வெல்லாத முடியாத இயக்கமாக உருமாற்றினார்.

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உட்பட 10 தேர்தல்களில் அதிமுக வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இணைய வேண்டும் என்று அதிமுக  தொண்டர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் பலமான கட்சியாக எடுத்துச் சென்றாலும் பொதுமக்கள் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் தேர்தல் வரலாறு.

இன்றைக்கு இருக்கின்ற நிலையில் பொதுமக்களுடைய நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஜெயக்குமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. அவருடைய வாயிலிருந்து நல்ல வார்த்தையை வராது.

இந்த தேர்தல் தோல்வியின் முதல் தோல்வியின் போதே நான் சொன்னேன், நாம் அனைவரும் அந்தந்த பகுதிகளில் கட்சி வளர்ப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் கேட்கவில்லை.

அதிமுகவினர் யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என அறிக்கை விட்டார்கள். ஆனால் 83% வாக்கு பதிவாகி இருக்கிறது என்றால் அதிமுகவினர் வாக்கு அளித்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டியில் அதிமுகவினர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் போது தான் தெரியும் எனத் தெரிவித்தார்.

Tags: OPS
ShareTweetSendShare
Previous Post

விழிஞ்சம் துறைமுகம் வந்த பிரமாண்ட சரக்கு கப்பல்!

Next Post

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies