அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! - ஓ. பன்னீர்செல்வம்
Jun 13, 2026, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! – ஓ. பன்னீர்செல்வம்

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் எழும்பூரில் உள்ள அவரது திருவுருவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எம் ஜி ஆர், ஜெயலலிதா 50 ஆண்டு காலம் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை ஏன் டெபாசிட் இழந்தது? பல்வேறு இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடம் சென்றதற்கு என்ன காரணம்?

அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதை மாபெரும் இயக்கமாக யாராலும் வெல்லாத முடியாத இயக்கமாக உருமாற்றினார்.

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உட்பட 10 தேர்தல்களில் அதிமுக வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இணைய வேண்டும் என்று அதிமுக  தொண்டர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் பலமான கட்சியாக எடுத்துச் சென்றாலும் பொதுமக்கள் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் தேர்தல் வரலாறு.

இன்றைக்கு இருக்கின்ற நிலையில் பொதுமக்களுடைய நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஜெயக்குமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. அவருடைய வாயிலிருந்து நல்ல வார்த்தையை வராது.

இந்த தேர்தல் தோல்வியின் முதல் தோல்வியின் போதே நான் சொன்னேன், நாம் அனைவரும் அந்தந்த பகுதிகளில் கட்சி வளர்ப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் கேட்கவில்லை.

அதிமுகவினர் யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என அறிக்கை விட்டார்கள். ஆனால் 83% வாக்கு பதிவாகி இருக்கிறது என்றால் அதிமுகவினர் வாக்கு அளித்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டியில் அதிமுகவினர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் போது தான் தெரியும் எனத் தெரிவித்தார்.

Tags: OPS
ShareTweetSendShare
Previous Post

விழிஞ்சம் துறைமுகம் வந்த பிரமாண்ட சரக்கு கப்பல்!

Next Post

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies