அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! - ஓ. பன்னீர்செல்வம்
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! – ஓ. பன்னீர்செல்வம்

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் எழும்பூரில் உள்ள அவரது திருவுருவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எம் ஜி ஆர், ஜெயலலிதா 50 ஆண்டு காலம் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை ஏன் டெபாசிட் இழந்தது? பல்வேறு இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடம் சென்றதற்கு என்ன காரணம்?

அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதை மாபெரும் இயக்கமாக யாராலும் வெல்லாத முடியாத இயக்கமாக உருமாற்றினார்.

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உட்பட 10 தேர்தல்களில் அதிமுக வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இணைய வேண்டும் என்று அதிமுக  தொண்டர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் பலமான கட்சியாக எடுத்துச் சென்றாலும் பொதுமக்கள் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் தேர்தல் வரலாறு.

இன்றைக்கு இருக்கின்ற நிலையில் பொதுமக்களுடைய நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஜெயக்குமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. அவருடைய வாயிலிருந்து நல்ல வார்த்தையை வராது.

இந்த தேர்தல் தோல்வியின் முதல் தோல்வியின் போதே நான் சொன்னேன், நாம் அனைவரும் அந்தந்த பகுதிகளில் கட்சி வளர்ப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் கேட்கவில்லை.

அதிமுகவினர் யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என அறிக்கை விட்டார்கள். ஆனால் 83% வாக்கு பதிவாகி இருக்கிறது என்றால் அதிமுகவினர் வாக்கு அளித்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டியில் அதிமுகவினர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் போது தான் தெரியும் எனத் தெரிவித்தார்.

Tags: OPS
Share
Tweet
SendShare
Previous Post

விழிஞ்சம் துறைமுகம் வந்த பிரமாண்ட சரக்கு கப்பல்!

Next Post

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies