ஆடி காரில் சைரனுடன் பந்தாவாக உலா சிக்கிய IAS அதிகாரி!
Oct 9, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி காரில் சைரனுடன் பந்தாவாக உலா சிக்கிய IAS அதிகாரி!

Web Desk by Web Desk
Jul 12, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனியார் காரில் சைரன் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புனேவில் இருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாள், மேலும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

UPSC தேர்வில் அகில இந்திய ரேங்க் 821 பெற்ற பூஜா கேத்கர், 2023 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர், தனது தனிப்பட்ட ஆடி சொகுசு காரில் சைரனைப் பயன்படுத்தியாக புகார் எழுந்தது. அவர் தமது சொந்த காரில். மகாராஷ்டிரா அரசு சின்னத்துடன் கூடிய விஐபி நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. ” இதுபோல பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொதுவாக இல்லாத சலுகைகளை அவர் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.

கூடுதல் ஆட்சியர் அஜய் மோரின் அறையையும், பூஜா கேத்கர் பயன்படுத்தியிருக்கிறார். கூடுதல் ஆட்சியர் அனுமதியின்றி அலுவலக அறைகளிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்.

மேலும், வருவாய் உதவியாளரிடம் தமது பெயரில் ஒரு லெட்டர்ஹெட், பெயர்ப்பலகை மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன், போதுமான பணியாளர்கள் கொண்ட அலுவலக இடம் ஆகியவற்றைக் கேட்டு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்..

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, புனே ஆட்சியர் சுஹாஸ் திவாஸ், பூஜா கேத்கரை புனேவில் இருந்து வாஷிமுக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையேற்று, பூஜா கேத்கரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.

புனேவில் உதவி ஆட்சியராக இருந்த பூஜா கேத்கர் தனது பயிற்சியின் மீதமுள்ள காலத்தை வாஷிம் மாவட்டத்தில் பணியாற்றுவார்” என்று உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், பூஜா கேத்கர் மீது இன்னொரு புகார் எழுந்திருக்கிறது.

UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஊனமுற்றோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) சான்றிதழ்களைப் போலியாக சமர்ப்பித்திருக்கிறார் என்றும், சலுகைகளைப் பெற, அவர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அளித்த பிரமாணப் பத்திரத்தில், தான் பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்திருக்கிறார். 40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அவரது பெற்றோர் வைத்துள்ள நிலையில் ஒபிசி கிரீமிலேயர் சான்றிதழை சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பூஜா கேத்கருக்கு, அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (AIIMS) தனது பார்வை மற்றும் மனநல குறைபாடுகளை உறுதி செய்வதற்காக கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐந்து முறை அழைக்கப் பட்ட போதிலும், அவர் மருத்துவ சோதனைக்கு வராமல் தவிர்த்து விட்டார். ஆறாவது முறையாக அழைத்தப் போது மருத்துவப் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டார். அந்த சோதனையில் அவருக்கு பார்வை குறைபாடோ, மனநல பாதிப்போ இல்லை என தெரியவந்தது.

விதிகளை மீறி ஆடி காரில் சிவப்பு ஊதா நிற சைரன் விளக்கை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பூஜா கேத்கர் ஓபிசி இடஒதுக்கீட்டில் UPSC தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால்தான் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.

ஆனால், பூஜாவின் தந்தை திலீப் கேத்கரும் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என்றும், ஆண்டு வருமானம் ரூ.43 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவர் ஓபிசி பிரிவில் தேர்வு செய்யப்பட்டது செல்லுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து,மத்திய அரசு கூடுதல் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி விசாரணை நடத்துவார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி இரண்டு வாரத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது .

Tags: An IAS officer who was caught walking as a hostage in an Audi car with a siren!
ShareTweetSendShare
Previous Post

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சாக்கடை நதியில் நீச்சல் போட்டி? ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி!

Related News

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies