சென்னை திருமங்கலம் அருகே குண்டு குழியுமான சாலையில் விழுந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தங்கை ஹேமமாலினியுடன் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அண்ணா நகர் கடந்து திருமங்கலம் செல்லும் போது, குண்டும் குழியுமான சாலையில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, பின்பக்கம் வந்த லாரி, ஹேமமாலினி மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய அவரது சகோதரர் வெங்கடேசன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மழைக்காலம் முன்னதாகவே குண்டு குழியுமான சாலைகளை சரி செய்து இருந்தால் இதுபோன்ற உயிர் பலி ஏற்பட்டு இருக்காது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.