உத்தரப் பிரதேச மாநிலம் ஷஜஹன்பூர் அருகே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி முதல்வரை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் அமர வைத்து தள்ளி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வரான ராஜேஷ்குமார் என்பவரை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் அமர வைத்து தள்ளிச்சென்றனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளான நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தன்னால் நடக்க முடியாது என்பதால் மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றதாகவும் ராஜேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.