காசாவில் இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழி தாக்குதலில் 90 பேர் உயிரிழந்ததாகவும், 300 பேர் பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் ஓராண்டாக நீடிக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனர்களை கொன்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை குற்றம்சாட்டியுள்ளது.