ஆடி மாத பூஜையை ஒட்டி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் ஆடி மாத பூஜைக்காக இக்கோயில் திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில், இந்தாண்டு பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் கோயில் திறக்கப்பட்ட உடன் ஆலய கருவறை உள்ளிட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளதாகவும், வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.