வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் – செம்பருத்தி தம்பதியினருக்கு ராஜா, ஸ்ரீசாந்த் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சிறுவர்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடச் சென்றனர்.
அப்போது ஏரிக்குள் பந்து விழுந்ததால் அதனை எடுக்க சென்றபோது சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். போலீசார் சிறுவர்களின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.