கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா, போதைக்காளான் விற்பனை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த 5 இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா, போதைக் காளான் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.