நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கட்டிட மேஸ்திரி ஒருவர் உயிரிழந்தார்.
வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள், ஸ்கார்ப் டைபஸ் எனும் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, வெள்ளக்கல்பட்டி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், “மழை காலங்களில் மட்டும் பரவும் இந்த காய்ச்சலுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.