திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு முத்துக்குமாரசாமி கோவிலில், பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமி கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
விரதமிருந்த பக்தர்கள், பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாகச் சென்று முத்துக்குமாரசாமி கோவிலை அடைந்தனர்.
பின்னர், கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.