சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக அம்மாநில அரசின் பரிந்துரையின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டாளர், தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அரசு உயர் பதவிகளை பெற்றுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டால், அரசு வேலைக்காக காத்திருந்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை போலீஸார் விசாரித்துவந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு பரிந்துரை செய்தது. இதன்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
















