அதானி குழுமத்துக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஆதாயம் அடைவதற்காக பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி ஆதாயம் அடைந்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மறுஆய்வு மனுவைப் பரிசீலித்ததில், ஏற்கெனவே பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவொரு தவறும் இல்லை என்று கூறி, மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
















