முன்னாள் அமைச்சர் சிவசங்கருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் தனது மகனுக்கு போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி 23 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த இளஞ்செழியனை ஈரோட்டில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















