முதலமைச்சர் விஜய்யின் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாமல் அரசு மறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
முதலமைச்சருக்கான தனிச் செயலாளராக ஒருவரை நியமிப்பது வழக்கம். அதன்படி, முதலமைச்சர் விஜய்க்கான தனிச் செயலாளராக, அவரது சினிமா மேலாளரான ஜெகதீஷ் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்த ஜெகதீஷ், தன்னை முதல்வரின் தனிச் செயலாளராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜெகதீஷின் நியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், கடந்த மே 12-ம் தேதியே முதலமைச்சரின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அரசாணையை அரசு மறைத்து வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும், பதவியேற்றபோது வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாக அறிவித்திருந்த முதலமைச்சர் விஜய், தனது தனிச் செயலாளர் நியமனத்தையே மறைத்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
















