நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் என கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சியினர் ஆளுநர் பதவியை கிண்டல் செய்யும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக பொறுப்பேற்று 45 நாட்கள் மட்டுமே ஆகிறது என்றும், ஒவ்வொரு அமைச்சர்களும் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருவதாக தெரிவித்தார். புதிய அரசுக்குச் சற்று கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.
தென்மேற்கு பருவமழை குறைவாகவே உள்ளது என்றும். வடமேற்கு பருவமழை வரும்போதுதான் நிலைமை மாறும் என தெரிவித்தார்.
கடந்த 21 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறகப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
















