முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!
Jun 26, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 06:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும்
2022-ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமலேயே, ஒப்பந்ததாரருக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தொடங்காத நிலையிலேயே,ஒப்பந்ததாரருக்கு 3 கோடியே 23 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் முன்பு கரூரில் பணியாற்றி தற்போது, மதுரை மண்டல உதவிப் பொறியாளராக இருக்கும் கண்ணன்,நெடுஞ்சாலைத் துறையில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பொறியாளர்கள் மற்றும்
கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்த நிறுவனமான சங்கரானந்த் இன்ஃப்ரா, பணியிட மாறுதல் பெற்ற உதவிப் பொறியாளர்கள் 8 பேர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படியும், கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்களை தயாரித்தல் என்பன உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைப் பணிகளிலும் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல், சுமார் 25 கோடி ரூபாய் வரை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், வழக்கு தொடர்பான நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: raid in velu residenceDirectorate of Vigilance and Anti-Corruption.dvacformer DMK Minister E.V. Velu.forty lakhs seized
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

Next Post

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

Related News

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies