திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும்
2022-ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமலேயே, ஒப்பந்ததாரருக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தொடங்காத நிலையிலேயே,ஒப்பந்ததாரருக்கு 3 கோடியே 23 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையில் முன்பு கரூரில் பணியாற்றி தற்போது, மதுரை மண்டல உதவிப் பொறியாளராக இருக்கும் கண்ணன்,நெடுஞ்சாலைத் துறையில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பொறியாளர்கள் மற்றும்
கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்த நிறுவனமான சங்கரானந்த் இன்ஃப்ரா, பணியிட மாறுதல் பெற்ற உதவிப் பொறியாளர்கள் 8 பேர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படியும், கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்களை தயாரித்தல் என்பன உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைப் பணிகளிலும் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல், சுமார் 25 கோடி ரூபாய் வரை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், வழக்கு தொடர்பான நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
















