சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே 3 கோடியே 23 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரில், சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் ஒப்பந்ததாரர்களுக்கு பல கோடி ரூபாய் அரசுப் பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் கண்ணன், பூபாலன் சிங், சத்தியபாமா உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. கரூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவில் 4 சாலைப் பணிகளுக்காக 4 கோடியே 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல் சுமார் 3 கோடியே 23 லட்சம் ரூபாய் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைப் பணிகளிலும் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல், சுமார் 25 கோடி ரூபவரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
















