டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி என்ன?
Apr 23, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் சுடப் பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத் துறை , ரகசிய சேவை முகமை, அமெரிக்க உள்துறை மற்றும், இராணுவத் துறையும், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் யார் ? சுட்ட இளைஞனின் பின்னணி என்ன ? இதனால் அமெரிக்க தேர்தலில் என்ன மாதிரியான திருப்பம் ஏற்படும் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பொதுக்கூட்ட மைதானத்தில், பார்வையாளர்கள் முன்பு, நின்று கொண்டிருந்த போது, தன் காதில் துப்பாக்கி தோட்டா துளைத்து சென்றதாக கூறிய டொனால்ட் ட்ரம்ப் ,தற்போது தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் , அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் கொல்லப் பட்டதாகவும் ,மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வரும் 22 ஆம் தேதி, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முதன்மை விசாரணை அமைப்பான மேற்பார்வை குழு முன் ஆஜராகி, சாட்சியம் அளிக்குமாறு ரகசிய சேவை முகமையின் இயக்குனர் கிம்பெர்லி சீட்டிலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை நோக்கி சுட்ட 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சேவை முகமை கொல்வதற்கு முன்னரே, அவரால் சுட முடிந்திருப்பது அமெரிக்க FBI உட்பட பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் ,தனது தந்தையின் AR-15 ரக துப்பாக்கி மூலம்,சம்பவ இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து சுட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளன.

(BRETH)

ஒரே இரவில் உலக அளவில் பிரபலமாகி விட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில்படித்திருக்கிறார். மேலும் பள்ளியில் படிக்கும் போது, பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவியூவின் படி, தேசிய கணிதம் மற்றும் அறிவியல் கண்டுப்பிடிப்பில் “நட்சத்திர விருதை” பெற்றிருக்கிறார்.

உள்ளூர் துப்பாக்கி சுடும் அமைப்பில், குறைந்தது ஒரு ஆண்டுக்கும் மேலாக உறுப்பினராக இருந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், உயர்நிலைப் பள்ளியில், துப்பாக்கி சுடும் அணியில் சேர பல முறை முயற்சி செய்த போதிலும், திறமை இன்மையால் நிராகரிக்கப்பட்டான் என்று தி போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்த படுகொலை முயற்சிக்கான நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரிய வரும் என்று FBI இன் சிறப்பு அதிகாரியான ரோஜெக் கூறியிருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் பிரச்சாரக் குழுவுக்கு சுமார் 1250 ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறான் என்றும் , தனக்கு 18 வயதை அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வாக்களிக்க குடியரசுக் கட்சியினராக தன்னை பதிவு செய்திருக்கிறான் என்றும் அரசு வாக்காளர் பதிவுகளின் படி தெரிய வந்துள்ளது.

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் , உயிரோடு இருந்திருந்தால், இந்த ஆண்டு நடக்கும் தேர்தலே அவன் வாக்களிக்கும் முதல் தேர்தலாக இருந்திருக்கும் .

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ள நிலையில், அவர்களது சமூக வலைத்தளங்கள் குறித்தும் டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்தும் புலனாய்வு விசாரணை நடைப்பெற்று வருகிறது. அதில், துப்பாக்கிகளை வாங்கும் மற்றும் விற்கும் வணிகச் சந்தைகளுடன் தொடர்புகள் கண்டறிய பட்டுள்ளன என்று USA TODAY தெரிவித்துள்ளது.

எந்த வித குற்றப் பதிவும் இல்லாத தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், முதியோர் இல்லத்தில் சேவைகள் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது . இந்நிலையில் , ஏன் முன்னாள் அதிபரை அவர் கொல்ல முயற்சித்தார் ? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடந்துவரும் நிலையில் , வரும் நாட்களில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: What is the background of the shooter on Trump?
ShareTweetSendShare
Previous Post

மேலாளர் பதவியில் இருந்து கரேத் சவுத்கேட் விலகல்!

Next Post

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்திய பேருந்துகளுக்கு அபராதம்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

Load More

அண்மைச் செய்திகள்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies