டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி என்ன?
Sep 13, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 11:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் சுடப் பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத் துறை , ரகசிய சேவை முகமை, அமெரிக்க உள்துறை மற்றும், இராணுவத் துறையும், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் யார் ? சுட்ட இளைஞனின் பின்னணி என்ன ? இதனால் அமெரிக்க தேர்தலில் என்ன மாதிரியான திருப்பம் ஏற்படும் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பொதுக்கூட்ட மைதானத்தில், பார்வையாளர்கள் முன்பு, நின்று கொண்டிருந்த போது, தன் காதில் துப்பாக்கி தோட்டா துளைத்து சென்றதாக கூறிய டொனால்ட் ட்ரம்ப் ,தற்போது தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் , அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் கொல்லப் பட்டதாகவும் ,மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வரும் 22 ஆம் தேதி, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முதன்மை விசாரணை அமைப்பான மேற்பார்வை குழு முன் ஆஜராகி, சாட்சியம் அளிக்குமாறு ரகசிய சேவை முகமையின் இயக்குனர் கிம்பெர்லி சீட்டிலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை நோக்கி சுட்ட 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சேவை முகமை கொல்வதற்கு முன்னரே, அவரால் சுட முடிந்திருப்பது அமெரிக்க FBI உட்பட பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் ,தனது தந்தையின் AR-15 ரக துப்பாக்கி மூலம்,சம்பவ இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து சுட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளன.

(BRETH)

ஒரே இரவில் உலக அளவில் பிரபலமாகி விட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில்படித்திருக்கிறார். மேலும் பள்ளியில் படிக்கும் போது, பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவியூவின் படி, தேசிய கணிதம் மற்றும் அறிவியல் கண்டுப்பிடிப்பில் “நட்சத்திர விருதை” பெற்றிருக்கிறார்.

உள்ளூர் துப்பாக்கி சுடும் அமைப்பில், குறைந்தது ஒரு ஆண்டுக்கும் மேலாக உறுப்பினராக இருந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், உயர்நிலைப் பள்ளியில், துப்பாக்கி சுடும் அணியில் சேர பல முறை முயற்சி செய்த போதிலும், திறமை இன்மையால் நிராகரிக்கப்பட்டான் என்று தி போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்த படுகொலை முயற்சிக்கான நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரிய வரும் என்று FBI இன் சிறப்பு அதிகாரியான ரோஜெக் கூறியிருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் பிரச்சாரக் குழுவுக்கு சுமார் 1250 ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறான் என்றும் , தனக்கு 18 வயதை அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வாக்களிக்க குடியரசுக் கட்சியினராக தன்னை பதிவு செய்திருக்கிறான் என்றும் அரசு வாக்காளர் பதிவுகளின் படி தெரிய வந்துள்ளது.

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் , உயிரோடு இருந்திருந்தால், இந்த ஆண்டு நடக்கும் தேர்தலே அவன் வாக்களிக்கும் முதல் தேர்தலாக இருந்திருக்கும் .

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ள நிலையில், அவர்களது சமூக வலைத்தளங்கள் குறித்தும் டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்தும் புலனாய்வு விசாரணை நடைப்பெற்று வருகிறது. அதில், துப்பாக்கிகளை வாங்கும் மற்றும் விற்கும் வணிகச் சந்தைகளுடன் தொடர்புகள் கண்டறிய பட்டுள்ளன என்று USA TODAY தெரிவித்துள்ளது.

எந்த வித குற்றப் பதிவும் இல்லாத தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், முதியோர் இல்லத்தில் சேவைகள் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது . இந்நிலையில் , ஏன் முன்னாள் அதிபரை அவர் கொல்ல முயற்சித்தார் ? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடந்துவரும் நிலையில் , வரும் நாட்களில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: What is the background of the shooter on Trump?
Share
Tweet
SendShare
Previous Post

மேலாளர் பதவியில் இருந்து கரேத் சவுத்கேட் விலகல்!

Next Post

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்திய பேருந்துகளுக்கு அபராதம்!

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies