ஆந்திராவில் காவலரை வடமாநிலத்தவர் ஒருவர் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி யுள்ளது.
சாதுபேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தாசு என்பவர் சக காவலருடன் அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த வடமாநிலத்தவர் ஒருவர் காவலரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த நிலையில் வடமாநிலத்தவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் எனவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.