நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனின் உடலை 2வது நாளாக தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பிதர்காடு பொண்ணான் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற குணசேகரன், கவியரசன் ஆகிய இரண்டு மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் குணசேகரனின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கவியரசனின் உடலை 2வது நாளாக மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.